சென்னையில் மேலும் 32 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி!

 

சென்னையில் மேலும் 32 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொடிய வகை கொரோனா வைரஸால் லட்ச கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொடிய வகை கொரோனா வைரஸால் லட்ச கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கிட்டத்தட்ட 4 மாதங்களாக உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் பெரியவர்கள்,சிறியவர்கள், கர்ப்பிணிகள் என அனைவரையும் தாக்கி வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்ட இடங்களில் மூன்றில் ஒரு பங்கு உயிரிழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இதனை பெருந்தொற்றாக அறிவித்துள்ள அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. தற்போது சிறிது சிறிதாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது.  ஆனால் கொரோனா வைரஸால் அதிக அளவில் பாதித்துள்ள சென்னையில் ஓரளவு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

baby

இந்நிலையில் சென்னையில் 12 வயதுக்குட்பட்ட 32 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் ஒரே நாளில், பிறந்து ஒரே நாளான குழந்தை உட்பட 15 குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.