சென்னையில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா.. பாதிப்பு 7,117 ஆக உயர்வு!

 

சென்னையில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா.. பாதிப்பு 7,117 ஆக உயர்வு!

சென்னையில் மொத்தமாக 7,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 11,700ஐ கடந்துள்ளது. அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். சென்னையில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7000ஐ எட்டியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு பெருமளவு உயர்ந்ததன் முக்கிய காரணம் கோயம்பேடு சந்தையில் கொரோனா வைரஸ் பரவியது தான். கோயம்பேடு மார்க்கெட் மூலமாக மட்டுமே 3000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில்  பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. 

ttn

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மண்டலவாரியான விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், ராயபுரத்தில் அதிகபட்சமாக 1272 பேரும் , தண்டையார்பேட்டையில் 610 பேரும் , திரு.வி.க நகரில் 835 பேரும் , அண்ணா நகரில் 586 பேரும் , தேனாம்பேட்டையில் 786 பேரும் , கோடம்பாக்கத்தில் 1077 பேரும்  பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மொத்தமாக 7,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கோடம்பாக்கம் மற்றும் ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 1000ஐ எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.