சென்னையில் மட்டும் 100 காவலர்களுக்கு கொரோனா உறுதி!

 

சென்னையில் மட்டும் 100 காவலர்களுக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று  புதிதாக 716 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று  புதிதாக 716 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது.

coronavirus

இந்நிலையில் சென்னையில் கூடுதல் ஆணையர் உட்பட 100 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா தடுப்புப் பணியில் பெறும் பங்காற்றி வரும் காவல்துறையினருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னை கூடுதல் ஆணையராக பணிபுரிந்து வந்த ஐ.பி.எஸ் அதிகாரி, காவல் துறை துணை ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் போக்குவரத்து ஆயுதப்படை,தீயணைப்பு, ரயில்வே ஊர்காவல் படையை சேர்ந்த சுமார் 100 காவல்துறையினருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒரு துணை ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவருக்கு அறிகுறிகள் இல்லாததால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.