சென்னையில் பத்திரிகையாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

 

சென்னையில் பத்திரிகையாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னையில் பத்திரிகையாளர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையில் பத்திரிகையாளர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பத்திரிகையாளர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரபல நாளிதழ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 24 வயது பத்திரிகையாளருக்கும், பிரபல தொலைக்காட்சி சேனலில் பணியாற்றி வரும் ராயபுரத்தில் தங்கியிருந்த உதவி ஆசிரியருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ttn

இதனால் 24 வயது பத்திரிகையாளர் தங்கியிருந்த மேன்சன் அமைந்துள்ள திருவல்லிக்கேணி பெரிய தெரு பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் இந்த இரு பத்திரிகையாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள். அதேபோல அந்த செய்தியாளர் வேலை பார்த்து வந்த தனியார் தொலைக்காட்சி ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.