சென்னையில் பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

 

சென்னையில் பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜெமினி மேம்பாலாத்தில் மர்ம பொருள் ஒன்று திடீரென மிகுந்த சத்துத்துடன் வெடித்துள்ளது. நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் அருகிலிருந்த கார் ஷோரூமின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த  தேனாம்பேட்டை உதவி ஆணையர் கோவிந்தராஜ் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர். சோதனையில் அது நாட்டு வெடிகுண்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு வீச்சு

அண்ணா மேம்பாலத்தின் மேலிருந்து அடுத்தடுத்து 2 வெடிகுண்டுகளை மர்ம நபர் வீசிவிட்டு தப்பி ஓடி உள்ளார். இதனிடையே சென்னை பெருநகர காவல் ஆணையர் A.K.விஸ்வநாதன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.