சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசிய கல்லூரி மாணவர்! – ரவுடிகளை கொல்ல முயற்சியா?

 

சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசிய கல்லூரி மாணவர்! – ரவுடிகளை கொல்ல முயற்சியா?

இரு தினங்களுக்கு முன்பு சென்னை அண்ணா சாலையில் அண்ணா மேம்பாலம் அருகே தேனாம்பேட்டை போலீஸ் நிலையம் அருகே சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. பைக்கில் வந்த நபர் குண்டுவீசிவிட்டு சென்றதை சிசிடிவி காமரா மூலம் போலீசார் கண்டறிந்தனர். இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சென்னை அண்ணா சாலையில் பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டு வீசியது தொடர்பாக கல்லூரி மாணவர் சிக்கியுள்ளார். முன்னாள் ரவுடிகளை பைக்கில் பின்தொடர்ந்து வந்தவர்கள் இந்த குண்டுகளை வீசியது தெரியவந்துள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு சென்னை அண்ணா சாலையில் அண்ணா மேம்பாலம் அருகே தேனாம்பேட்டை போலீஸ் நிலையம் அருகே சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. பைக்கில் வந்த நபர் குண்டுவீசிவிட்டு சென்றதை சிசிடிவி காமரா மூலம் போலீசார் கண்டறிந்தனர். இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குற்றவாளியை பிடிக்க ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டது.
போலீசாரின் விசாரணையில் வட சென்னை, தென் சென்னை ரவுடிகள் இருவர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பியுள்ளனர். அப்போது அவர்களை மோட்டார் சைக்கிளிகளில் இளைஞர்கள் பின்தொடர்ந்துள்ளனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்தவர் இரண்டு நாட்டு குண்டுகளை வீசியுள்ளார். 

country-bomb-09

நாட்டு வெடிகுண்டுகள் வாகன ஓட்டிகள் மீது விழாமல் சாலையின் ஓரத்தில் விழுந்துள்ளது. இதனால் பெரிய அளவில் விபத்துக்கள் ஏற்படவில்லை. அந்த பகுதியில் வந்துகொண்டிருந்த கார்களின் கண்ணாடி உடைந்ததாக கூறப்படுகிறது. இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரையும் போலீசார் கண்டறிந்துள்ளனர். அவர்கள் இருவரும் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருவது தெரியவந்துள்ளது. அதில் ஒருவரின் வயது 17 என்றும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.