சென்னையில் நர்ஸ் தூக்கிட்டு தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை!

 

சென்னையில் நர்ஸ் தூக்கிட்டு தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை!

தனியார் மருத்துவமனையில் நர்சாக பணி புரிந்து வந்த நிலையில் சதீஷ் சொந்தமாகத் தொழில் செய்து வந்துள்ளார். 

ஆவடி அடுத்த பட்டாபிராம் தீனதயாளன் நகர் காந்தியடிகள் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் திருவள்ளூரைச் சேர்ந்த  ஜோஷிரீனா  என்பவரை கடந்த 2016 ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரேச்சல் (3) என்ற மகளும், ஜான் பிரபாகர் என்ற ஒரு வயது மகனும் உள்ளனர். ஜோஷிரீனா சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணி புரிந்து வந்த நிலையில் சதீஷ் சொந்தமாகத் தொழில் செய்து வந்துள்ளார். 

ttn

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஜோஷிரீனா தனது வேலையை ராஜினாமா செய்ததுடன் வரும் 26ந் தேதி சிங்கப்பூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலையில் சேர இருந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் கணவன் -மாமனார் -மாமியார் இடையே இது தொடர்பாக வீட்டில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஜோஷிரீனா கணவர் மற்றும் குழந்தைகள் படுக்கையறையில் தூங்கச்சென்ற பின்பு வீட்டின் மற்றொரு அறையில் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டார்.

ttn

இதையடுத்து, நேற்று காலை தூங்கி எழுந்த குடும்பத்தினர் ஜோஷிரீனா தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன் ஜோஷிரீனா உடலை கைபற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களுக்குத் திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.