சென்னையில் தொற்று நோய், டெங்கு தடுப்பு

 

சென்னையில் தொற்று நோய், டெங்கு  தடுப்பு

சென்னையில் தோற்று நோய் மற்றும் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக விழிப்புணர்வு வாகனத்தை அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் தங்கமணி தொடங்கி வைத்தனர்.

சென்னையில் தொற்று நோய் மற்றும் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக விழிப்புணர்வு வாகனத்தை அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் தங்கமணி தொடங்கி வைத்தனர்.

மழைக்காலங்களில் பரவி வரும் கொசுக்களால் மிகப் பெரிய அளவில் மக்கள் தொற்று நோய்களாலும் மர்ம காய்ச்சல்களாலும் பாதிக்க பட்டு வருகின்றனர். சென்னையில் ஆங்காங்கே காணப்படும் குப்பை கூளங்களாலும் மழைத் தண்ணீர் தேங்குவதாலும் இவ்வகை கொடிய நோய்கள் எளிதில் பரவி வருகின்றன. மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததும் இதற்கு ஒரு காரணமாகும், 

அதனால், மக்களிடையே இவ்வகை கொடிய நோய்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னையில் பல்வேறு இடங்களில், இந்த  வாகனம் மூலம் தொற்று நோய் மற்றும் டெங்கு காய்ச்சலை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.