சென்னையில் தொடர் பைக் திருட்டு: குற்றவாளிகள் சிறையில் அடைப்பு!

 

சென்னையில் தொடர் பைக் திருட்டு: குற்றவாளிகள் சிறையில் அடைப்பு!

சென்னையில்  தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கிண்டி : சென்னையில்  தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை கிண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வருவதாகக் கிண்டி காவல் நிலையத்தில் புகார்கள் குவிந்தன. இதையடுத்து காவல் ஆய்வாளர் தன்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிண்டியைச் சேர்ந்த புருஷோத்தமன் மற்றும் லாரன்ஸ் ஆகியோர் கிண்டி, மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள மதுபான கடைகள் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை திருடிசென்றது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 6 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.