சென்னையில் திருநங்கைகளுக்கான தனி மருத்துவ மையம் 

 

சென்னையில் திருநங்கைகளுக்கான தனி மருத்துவ மையம் 

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே அமைந்துள்ள ராஜீவ்காந்தி பன்னோக்கு மருத்துவமனையில், ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய2 அறைகள் கொண்ட மருத்துவ மையம் மூன்றாவது பாலினத்தவருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே அமைந்துள்ள ராஜீவ்காந்தி பன்னோக்கு மருத்துவமனையில், ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய2 அறைகள் கொண்ட மருத்துவ மையம் மூன்றாவது பாலினத்தவருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

transgenders

 இந்த மருத்துவ மையத்தை குடும்பநலத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்தார்.  தொடர்ந்து, மூன்றாவது பாலினத்தவரையும் மதிக்க வேண்டும், அவர்களுக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும் மூன்றாம் பாலின சமூகத்திற்கான ஆதரவு உறுதி மொழியும் ஏற்கப்பட்டது.

hospital

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், புதிதாக திறக்கப்பட்டுள்ள மருத்துவ மையம் மூலம் ராஜீவ்காந்தி மருத்துவமனையில், வாரம் தோறும்வெள்ளிக்கிழமை மூன்றாவது பாலினத்தவருக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து  மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அவர்களின் கல்வி தகுதி அடிப்படையில் வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கெனவே  இரண்டு திருநங்கைகளுக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வேலை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.