சென்னையில் கொரோனா பாதிப்பு 495 ஆக உயர்வு.. மண்டலவாரி பட்டியல் உள்ளே!

 

சென்னையில் கொரோனா பாதிப்பு 495 ஆக உயர்வு.. மண்டலவாரி பட்டியல் உள்ளே!

நேற்று மட்டும் சென்னையில் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் 26,496 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 824 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1800ஐ எட்டியுள்ளது. அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். அதனால் சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா பாதிப்படைந்த பல்வேறு பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. அதே போல பாதிக்கப்பட்ட பகுதியை சுற்றி 2 கி.மீ அளவிற்கு தன்னார்வலர்கள் உணவு வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்தார். 

ttn

சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் மாநகராட்சி நிர்வாகம், பாதிக்கப்பட்ட இடங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற முழு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம்,அடையாறு, வளசரவாக்கம்  உள்ளிட்ட இடங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று மட்டும் சென்னையில் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மொத்தமாக 495 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.