சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த பங்களாதேஷைச் சேர்ந்த நபர் உயிரிழப்பு!

 

சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த பங்களாதேஷைச் சேர்ந்த நபர் உயிரிழப்பு!

சென்னையில் மட்டும் நேற்று மட்டும் 510 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு 4,882 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 716 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8718 ஆக உயர்ந்துள்ளது. இந்த அளவிற்கு கொரோனா வைரஸ் தீவிரமாகிக் கொண்டே வந்து கொண்டிருப்பினும் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை தமிழகத்தில் 61 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சென்னையில் மட்டும் நேற்று மட்டும் 510 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு 4,882 ஆக உயர்ந்துள்ளது.

ttn

இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார். பங்களாதேஷை சேர்ந்த 60 வயதான அந்த நபருக்கு புற்றுநோய் இருந்ததால் தேனாம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு அங்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்தார்.