சென்னையில் கொரோனாவால் மேலும் ஒரு மருத்துவர் உயிரிழப்பு

 

சென்னையில் கொரோனாவால் மேலும் ஒரு மருத்துவர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், ஐந்து செவிலியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்தார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், ஐந்து செவிலியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்தார்.

coronavirus

இந்நிலையில் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நரம்பியல் நிபுணர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக இருந்த அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு அப்பல்லோவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உயிரிழந்த மருத்துவருக்கு வயது 60க்கு மேல் என கூறப்படுகிறது.

.