சென்னையில் கனமழை: வாகன ஓட்டிகள் சிரமம்!

 

சென்னையில் கனமழை: வாகன ஓட்டிகள் சிரமம்!

சென்னையின் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதால்  மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

சென்னையின் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதால்  மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

rain

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி  காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான இடங்களில் கடந்த சில தினங்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையின் பல இடங்களில் நேற்றிரவு லேசான மழை பெய்தது. 

rain

இந்நிலையில் இன்று காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை கிண்டி, அசோக் நகர், மாம்பலம், அரும்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி, வடபழனி, கோயம்பேடு, சூளைமேடு, கே.கே.நகர், போரூர், பூந்தமல்லி, வளசரவாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.  இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. காலை முதல் மழை பெய்து வருவதால்  வாகன ஓட்டிகள் சற்று சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.