சென்னையில் கஞ்சா விற்ற பெண் கைது!

 

சென்னையில் கஞ்சா விற்ற பெண் கைது!

சென்னையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் சமீப காலங்களாக குற்ற செயல்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்களிடையே பரவலான கருத்து நிலவி வருகிறது. தனியே செல்லும் பெண்களிடம் சில்மிஷம் செய்வதும், டூ வீலரில் செல்பவர்களிடம் வழிப்பறி செய்யும் சம்பவங்களும் சென்னை புளியந்தோப்பு பகுதிகளில் அதிகரித்து வருவதாக பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. 

சென்னையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் சமீப காலங்களாக குற்ற செயல்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்களிடையே பரவலான கருத்து நிலவி வருகிறது. தனியே செல்லும் பெண்களிடம் சில்மிஷம் செய்வதும், டூ வீலரில் செல்பவர்களிடம் வழிப்பறி செய்யும் சம்பவங்களும் சென்னை புளியந்தோப்பு பகுதிகளில் அதிகரித்து வருவதாக பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. 

women

இந்நிலையில், சென்னை புளியந்தோப்பு பகுதியில், டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், கஞ்சா விற்றுக் கொண்டிருந்தவர் ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த ரமா (எ) அருப்பு ரமா (48) என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து விற்பனை செய்வதற்காக அருப்பு ரமா, விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சென்னையில் கஞ்சா வியாபாரியை கைது செய்து, 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்த புளியந்தோப்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியை காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.