சென்னையில் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு

 

சென்னையில் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு

கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் படி உணவு பொருட்கள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும் என்று அரசுஉத்தரவிட்டது. அதன் படி, அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் படி உணவு பொருட்கள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும் என்று அரசுஉத்தரவிட்டது. அதன் படி, அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஞாயிற்றுக் கிழமைகளில் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. 

ttn

இந்நிலையில் சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை இறைச்சிக் கடைகளை மூடுமாறு சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் கடைகள் மூடப்படுவதாக அறிவித்துள்ளது. இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டமாக நிற்பதாகவும், இது கொரோனா பரவ வழிவகுக்கும் என்பதால் மூடப்படுவதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கமளித்துள்ளார்