சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் ரயில்கள் தனியார் வசமாகிறது..?

 

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் ரயில்கள் தனியார் வசமாகிறது..?

சென்னை முதல் மதுரை உள்ளிட்ட தடங்களில் இயங்கும்  எந்த ரயிலை தனியாரிடம் ஒப்படைக்கலாம் என்றும்  ரயில்வேத் துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். 

இந்திய ரயில்வேத் துறை தனியார் ரயில்களை இயக்குவதற்க்கு ஒப்புதல் அளித்தது. மேலும், ரயில்வேத் துறை தனியார் மயமாக்கப்படப் போகிறது என்ற தகவல்கள் வெளியானதும் பல மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

Train

இந்நிலையில், சென்னையில் இருந்து மதுரை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் ரயில்களை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்தும், சென்னை முதல் மதுரை உள்ளிட்ட தடங்களில் இயங்கும்  எந்த ரயிலை தனியாரிடம் ஒப்படைக்கலாம் என்றும்  ரயில்வேத் துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். 

சென்னையிலிருந்து செல்லும் ரயில்கள் மட்டுமின்றி, எர்ணாகுளம் முதல் திருவனந்தபுரம் உள்ளிட்ட தடங்களில் இயங்கும் ரயில்களையும் தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து ஆலோசனை நடை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.