“சென்னையில் இருந்து இதை வாங்காம வீட்டுக்கு வராதீங்க” கணவரை செல்லமாக மிரட்டிய தீபிகா படுகோனின் வைரல் பதிவு!

 

“சென்னையில் இருந்து இதை வாங்காம வீட்டுக்கு வராதீங்க” கணவரை செல்லமாக மிரட்டிய தீபிகா படுகோனின் வைரல் பதிவு!

இந்த படத்தை விஷ்ணு இந்தூரி, கபிர் கான் ஆகியோருடன் தீபிகா படுகோனும் இணைந்து தயாரித்துள்ளார்.

நடிகை தீபிகா படுகோன் – நடிகர் ரன்வீர் சிங் இருவரும் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான ஜோடி. இவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இத்தாலியில்  திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தைத் தொடர்ந்து இருவரும் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

ttn

அந்த வகையில் 1983-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற நிகழ்வு  83 என்ற பெயரில் படமாக உருவாகிறது.  கபீர் கான் இயக்கும் இப்படத்தில்  கபில் தேவ் கேரக்டரில் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ளார்.அவரின் மனைவியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் கிருஷ்ணமாச்சாரி கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ளார். இந்த படத்தை விஷ்ணு இந்தூரி, கபிர் கான் ஆகியோருடன் தீபிகா படுகோனும் இணைந்து தயாரித்துள்ளார்.

 

வரும் ஏப்ரல் 10ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகவுள்ள இப்படத்தின்  தமிழ் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளது கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின்  ஃபஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில், நடிகர்கள் கமல்ஹாசன், ரன்வீர் சிங், ஜீவா, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கபில்தேவ், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.   இந்த ஃபஸ்ட் லுக் போஸ்டரை ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.  

tt

இதற்கு பதிலளித்த மனைவி  தீபிகா படுகோன்,  1 கிலோ மைசூர் பாக் மற்றும் 2.5 கிலோ உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்காமல் வீட்டுக்கு வரவேண்டாம்” என செல்லமாக கூறியுள்ளார். இந்த பதிவானது தற்போது  இணையத்தில் வைரலாகி வருகிறது.