சென்னையில் இன்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா தொற்று! இதற்குதானா முழு ஊரடங்கு? மாவட்டவாரியான ரிப்போர்ட்!!

 

சென்னையில் இன்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா தொற்று! இதற்குதானா முழு ஊரடங்கு? மாவட்டவாரியான ரிப்போர்ட்!!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 121 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2000ஐ கடந்துள்ளது. இதில் பெரும்பாலானோர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. 

கொரோனா பாதிப்பு

​சென்னையில் 673பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 134பேருக்கும் திண்டுக்கல்லில் 80பேருக்கும் திருநெல்வேலியில் 63பேருக்கும், ஈரோட்டில் 70, திருச்சியில் 50 பேருக்கும்,நாமக்கல் 61 மற்றும் ராணிப்பேட்டை 38, செங்கல்பட்டு 70, மதுரை 79,கரூர் 42, தேனி 43, மற்றும் திருவள்ளூரில் 53பேருக்கு, தூத்துக்குடியில் 27, விழுப்புரத்தில் 48பேருக்கும், தருமபுரியில் ஒருவருக்கும் கொரோனா தொற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

List

இதேபோல் திருப்பூரில் 112, கடலூர் 26, மற்றும் சேலத்தில் 30, திருவாரூரில் 29, விருதுநகர் 32, திருவண்ணாமலை 14, தஞ்சாவூர் 55, நாகப்பட்டினம் 44, திருப்பத்தூர் 18, கன்னியாகுமரியில் 16 மற்றும் காஞ்சிபுரத்தில் 19பேருக்கும், சிவகங்கை 12 மற்றும் வேலூரில் 19பேருக்கும், நீலகிரியில் 9பேருக்கும், தென்காசி 37, கள்ளக்குறிச்சியில் 9 பேருக்கும் ராமநாதபுரத்தில் 13 பேருக்கும், அரியலூர் 6 மற்றும் பெரம்பலூரில் 7பேருக்கும், புதுக்கோட்டையில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.