சென்னையிலிருந்து குவைத் செல்லவிருந்த இண்டிகோ விமானத்தில் தீ விபத்து..!

 

சென்னையிலிருந்து குவைத் செல்லவிருந்த இண்டிகோ விமானத்தில் தீ விபத்து..!

சென்னை விமான நிலையத்திலிருந்து குவைத் செல்வதற்கு  இண்டிகோ விமானம் – 1751 காலை 4:05 மணி அளவில் புறப்பட்டது.

சென்னை விமான நிலையத்திலிருந்து குவைத் செல்வதற்கு  இண்டிகோ விமானம் – 1751 காலை 4:05 மணி அளவில் புறப்பட்டது. கிளம்பிய உடனேயே விமானத்தில் உள்ள சரக்குப்பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையறிந்தவுடன் இண்டிகோ விமானம் உடனடியாக தரை இறக்கப்பட்டது. பின்னர், தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் விமானத்தில் ஏற்பட்ட தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து சற்று தாமதமாகத் தெரிந்திருந்தால் கூட, விமானம் முழுவதும் தீப்பற்றியிருக்கக் கூடும். 

Indigo

உடனடியாக விமானம் தரையிறக்கப் பட்டதால் பயணிகளுக்கு எந்த விபத்தும் ஏற்படவில்லை. அதன் பின், அவசரமாக குவைத்-க்கு செல்லவிருந்த பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். விமானத்தின் சரிக்குப்பெட்டியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால், இண்டிகோ விமானம் தாமதமாகப் புறப்பட்டது.