சென்னைக்கு நடைபயணம் செய்த பெண்கள் உள்பட 15 பேருக்கு உதவிய போலீசார்!

 

சென்னைக்கு நடைபயணம் செய்த பெண்கள் உள்பட 15 பேருக்கு உதவிய போலீசார்!

பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கி அவர்கள் சென்னை செல்ல லாரி ஒன்றை ஏற்பாடு போலீசார் அவர்களை செய்து அனுப்பி வைத்தனர்.

திருவாரூரில் இருந்து சென்னைக்கு நடைப்பயணம் செய்தவர்களுக்கு கொள்ளிடம் போலீசார் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

tt

சென்னையை பூர்வீகமாக கொண்ட பெண்கள் உட்பட 15 பேர் சில மாதங்களுக்கு முன்பு திருவாரூர் சென்றுள்ளனர்.  இதையடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு  உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் சென்னை திரும்ப முடியவில்லை.  

rr

இதை தொடர்ந்து நடைபயணம் செய்து கொள்ளிடம் சென்ற அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் .இதன் பின்னர் அவர்களுக்கு சாப்பிட பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கி அவர்கள் சென்னை செல்ல லாரி ஒன்றை ஏற்பாடு போலீசார் அவர்களை செய்து அனுப்பி வைத்தனர். தக்க நேரத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு  உதவிய போலீசாருக்கு அப்பகுதி மக்கள்  உள்ளிட்ட பலரும் நன்றி கூறி வருவது குறிப்பிடத்தக்கது.