சென்சார் போர்டுக்கு சென்றது சூர்யாவின் என்.ஜி.கே

 

சென்சார் போர்டுக்கு சென்றது சூர்யாவின் என்.ஜி.கே

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்.ஜி.கே திரைப்படம் சென்சாருக்கு அனுப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்.ஜி.கே திரைப்படம் சென்சாருக்கு அனுப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் செல்வராகவன் – சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் என்.ஜி.கே. எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். .

முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை மையப்படுத்திய, இதில் தேவராஜ், பொன்வண்ணன், பாலா சிங், வேல ராமமூர்த்தி, குரு சோமசுந்தரம், அருள்தாஸ், இளவரசு என்று பலர் நடித்துள்ளனர்.

 

இந்த நிலையில் இப்படம் வரும் 31ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தை தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக சென்சாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசைமைத்துள்ள இப்படத்திற்கு சிவகுமார் விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.