செட்டிநாடு ஸ்பெஷல்: கருவேப்பில்லை குழம்பு
சுவையான செட்டிநாடு கருவேப்பில்லை குழம்பு எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
சுவையான செட்டிநாடு கருவேப்பில்லை குழம்பு எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
உருவிய கருவேப்பில்லை – 2 கப்
சின்ன வெங்காயம் – 1/4 கிலோ
பூண்டு – 1
சோம்பு – 2 டீஸ்பூன்
சாம்பார் பொடி – 4 டீஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க – கடுகு:1 டீஸ்பூன், உ. பருப்பு: 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
செய்முறை:
கருவேப்பில்லை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு , புளி எல்லாவற்றையும் தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து கொள்ளவும். பின்பு எண்ணெய் காயவைத்து அதில் கடுகு, உ. பருப்பு, பெருங்காயம் தாளித்து, நறுக்கிய பூண்டு, வெங்காயம் வதக்கி, சிவக்க வெந்தபின் அரைத்த கலவையைப் போட்டு 5 நிமிடம் வதக்கி, சட்னி பதத்தில் கொதித்தபின் இறக்கவும்