செங்கல் சூளையில் திடீரென வீசிய “சூழல் காற்று”… வைரல் வீடியோ!

 

செங்கல் சூளையில் திடீரென வீசிய “சூழல் காற்று”… வைரல் வீடியோ!

வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குமரி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குமரி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அதே போல நேற்று மாலையும் அங்கே லேசான மழை பெய்தது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மடத்துக்குளம் பகுதியில் அமைந்துள்ள செங்கல் சூளையில் திடீர் சூழல் காற்று ஏற்பட்டுள்ளது. அச்சமயம் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் அங்கிருந்து தலைதெறிக்க ஓடி, வீட்டுக்குள் சென்றுள்ளனர். 

 

சுமார் 2 நிமிடங்களுக்கு மேலாக அந்த சூழல் காற்று நீடித்ததாகக் கூறப்படுகிறது. அது செங்கல் சூளை என்பதால் அங்கிருந்த செம்மண் காரணமாக, அந்த சூழல் காற்று சிவப்பு வெளிறிய சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இதனை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.