செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு கொரோனா!

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு கொரோனா!

தமிழகத்தில் புதிதாக121பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  2058ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதித்தவர்களில் 1,128 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் இன்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

baby

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் செங்கல்பட்டில் 1 வயது பெண் குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சென்னையில் பிறந்து 7 மாதமான ஆண் குழந்தை, 1 வயது ஆண் குழந்தை, 2 வயது பெண் குழந்தை என 3 குழந்தைகளுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.