செங்கல்பட்டுக்கு ரயில் குறைவாக இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

 

செங்கல்பட்டுக்கு ரயில் குறைவாக இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

ரயில்கள் குறிப்பிட்ட அளவில் இயக்கப்பட்டாலும் தினந்தோறும் ஆயிரக் கணக்கான பயணிகள் அந்த ரயில்களில் பயணித்து வருகின்றனர்.

செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை வரை ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில்கள் குறிப்பிட்ட அளவில் இயக்கப்பட்டாலும் தினந்தோறும் ஆயிரக் கணக்கான பயணிகள் அந்த ரயில்களில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரும் வழியில் காட்டாங்குளத்தூர்- சிங்கப்பெருமாள் கோவில் தடத்தில் மூன்றாவது லைன் இணைப்பு மற்றும் தாண்டவாள பராமரிப்புப் பணி நடக்கவுள்ளதால் செங்கல்பட்டு  வரை இயக்கப் படும் ரயில் சேவைகள்  தாமதமாக இயங்கும் என்று தெற்கு ரயில்வேத் துறை அறிவித்துள்ளது. 

Train

மேலும், சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் சில ரயில்கள் இன்று முதல் வரும் 20 ஆம் தேதி வரை ரத்துச் செயப்படுவதாகவும், தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோருக்காக காட்டாங்குளத்தூரில் இருந்து சென்னை கடற்கரை வரை ரயில்கள் இயக்கப் படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.