செக் மோசடி: நடிகர் பிரகாஷ்ராஜிற்கு சம்மன்

 

செக் மோசடி: நடிகர் பிரகாஷ்ராஜிற்கு சம்மன்

 நடிகர் பிரகாஷ் ராஜ் நேரில் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 

 நடிகர் பிரகாஷ் ராஜ் நேரில் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 

நடிகர் பிரகாஷ்ராஜ், ‛தோனி, உன் சமையல் அறையில்’ போன்ற படங்களை தானே தயாரித்து, நடித்திருந்தார். உன் சமையல் அறையில் படம் ஹிட் ஆனதை தொடர்ந்து அந்த படத்தை ஹிந்தியில் தடிகா என்ற பெயரில் தயாரித்து இயக்கினார். இதில் இந்தியில் முன்னணி நடிகர்களான நானா படேகர், ஸ்ரேயா சரன், அலி பாசல், டாப்சி உள்ளிட்டோர் நடித்திருந்தார். இந்த படத்திற்காக பிரகாஷ்ராஜ் பாலிவுட் பைனான்சியர் ஒருவரிடம்  ரூ.5 கோடி கடன் பெற்றுள்ளர். பெற்ற கடனுக்கு பிரகாஷ் ராஜ் காசோலையாக பணத்தை திருப்பி வழங்கியுள்ளார். அவர் கொடுத்த செக் பணமின்றி திரும்பிவிட்டதாக கூறப்படுகிறது.

prakash raj

இதனால் அந்த பைனான்சியர் பிரகாஷ்ராஜ் மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற ஏப்ரல் 2ல் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பிரகாஷ்ராஜிற்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.