செக்ஸ் டார்ச்சரால் கள்ளக்காதலனை போலீசிடம் போட்டுக்கொடுத்த பெண் !

 

செக்ஸ் டார்ச்சரால் கள்ளக்காதலனை போலீசிடம் போட்டுக்கொடுத்த பெண் !

நாமக்கல் மாவட்டத்தில் கள்ளக் காதலனின் கொடுமையை அனுபவிக்க முடியாத பெண் அவர்தான் தன் கணவரை கொன்றதாக போலீசாரிடம் வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.

முதல் கணவனை இழந்த செல்வி தன்னுடைய 2 குழந்தைகளுடன் வெங்கடேசன் என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார். வெங்கடேசன் குடிபோதைக்கு அடிமையாகி அடிமையான நிலையில் செல்வியை நாள்தோறும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதற்கிடையே இந்த பிரச்சனையை தெரிந்து கொண்ட பெருமாள் என்பவர் செல்வியுடன் நட்பாக பழகியதில் பின்னர் இருவருக்கும் முறையற்ற உறவு ஏற்பட்டுள்ளது. கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து சித்ரவதை செய்வதாக காதலன் பெருமாளிடம் சொல்ல செல்விக்கு உதவுவதாக நினைத்து வெங்கடேசனை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார் பெருமாள். ஒருநாள் வெங்கடேசுக்கு அளவுக்கு அதிகமாக மதுபானம் வாங்கிக் கொடுத்து காவிரி ஆற்றில் தள்ளி கொலை செய்துள்ளார் பெருமாள்.

kallakadhal

பின்னர் தனிமையில் இருந்த செல்வியுடன் வரம்புக்கு மீறிய பாலியல் உறவில் ஈடுபட்டதால் மனஉளைச்சலுக்கு ஆளானார் செல்வி. குடிகாரனாக இருந்தாலும் இதுபோன்ற தொல்லை கொடுத்தது இல்லை என நினைத்த செல்வி கள்ளக்காதலன் பெருமாளின் செக்ஸ் சித்ரவதையை தாங்க முடியவில்லை. இதையடுத்து நேராக காவல்நிலையம் சென்ற செல்வி கணவருக்கு மதுபானம் வாங்கிக் கொடுத்து காவிரி ஆற்றில் தள்ளி கொன்றது பெருமாள்தான் என வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த குற்றத்துக்கு தானும் உடந்தை என்பதை ஒப்புக்கொண்டார் செல்வி. இதையடுத்து பெருமாளை கைது செய்த போலீசார் ஆற்றில் வீசப்பட்ட வெங்கடேசனின் உடலை தேடி வருகின்றனர்.

உடல் சுகம் ஒன்றே உலகம் என்று நினைக்கும் பெண்களுக்கு பெருமாள் போன்றவர்கள் வடிவில் துயரங்கள் வந்து கொண்டுதான் இருக்கும்.