செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாத நாய் : பியூஸ் மனுஷை கடுமையாக சாடிய எஸ்.வீ.சேகர்

 

செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாத நாய் :  பியூஸ் மனுஷை  கடுமையாக சாடிய எஸ்.வீ.சேகர்

பாஜக அலுவலகத்திற்குள் செருப்பு மாலையுடன் சென்ற சமூக செயல்பாட்டாளர் பியூஷ் மனுஷை  நடிகர் எஸ்.வீ சேகர் நாய் என்று குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார். 

பாஜக அலுவலகத்திற்குள் செருப்பு மாலையுடன் சென்ற சமூக செயல்பாட்டாளர் பியூஷ் மனுஷை  நடிகர் எஸ்.வீ சேகர் நாய் என்று குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார். 

சேலம் பாஜக அலுவலகத்திற்கு நேற்று வந்த சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் காஷ்மீர் விவகாரம், பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசின் செயல்பாடுகளை எதிர்த்து  கேள்வி எழுப்புவதற்காகச்   செருப்பு மாலையுடன் வந்திருந்தார். அப்போது அங்கிருந்த பாஜக நிர்வாகிகள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம்  முற்றியதையடுத்து பியூஸ் மனுஷ் மீது பாஜகவினர்  தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த பியூஸ் மனுஷை காவல்துறையினர் அங்கிருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாஜகவினர் பியூஸ் மனுஸுக்கு எதிராக கடுமையாகப் பேசி  வருகின்றனர்.

piyush

இந்நிலையில் நடிகரும் பாஜக உறுப்பினருமான எஸ்.வீ.சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் பியூஸ் மனுஷை  கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள பதிவில், ‘ஏதோ துணிக்கடைக்குள்ள CCTV இருக்கிறது தெரியாம போய் மிரட்டினா ஏமாந்து போய் 7லட்சம் குடுப்பாங்க. காட்டுதும் விடுவாங்க. அதேபோல பாஜக கட்சி ஆபீஸ்க்கும் போனா ஏதாவது தேறும்னு போனா இப்படித்தான் தேறும்.. செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாத நாய்க்கு கோவில்ல என்ன வேலை⁉️’ என்று சாடியுள்ளார். 

 

எஸ்.வீ. சேகரின் இந்த பதிவுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.