சூர்யா 38 படத்தின் கதாநாயகி இவர் தானா? வெளியானது புகைப்படம்!
நடிகர் சூர்யா நடிக்கவுள்ள 38வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
சென்னை: நடிகர் சூர்யா நடிக்கவுள்ள 38வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
நடிகை சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. அதையடுத்து செல்வராகவன் இயக்கியுள்ள என்ஜிகே திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகியுள்ளது.சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்திலும் நடித்து வருகிறார்.
அதையடுத்து சூர்யாவின் 38வது படத்தை இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கவுள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. அதைத்தொடுத்துப் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் சென்னையில் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார்.
முன்னதாக இப்படத்திற்காக சூர்யா மற்றும் சுதா கொங்காரார அஜ்மீர் தர்காவிற்கு சென்று வழிபாடு செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அபிசேக் பச்சன் புகைப்படத்தை பகிர்ந்து அமிதாப் சொன்ன செய்தி?