சூர்யா நம் நாட்டின் மிகச்சிறந்த நடிகர் : ஆஸ்கர் நாயகி புகழாரம்!

 

சூர்யா நம் நாட்டின் மிகச்சிறந்த நடிகர் : ஆஸ்கர் நாயகி புகழாரம்!

நாட்டின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யா தேசிய சின்னமாவார் என்று குனித் மோங்கா சிலாகித்துக் கூறியுள்ளார். 

சென்னை:  நாட்டின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யா தேசிய சின்னமாவார் என்று குனித் மோங்கா சிலாகித்துக் கூறியுள்ளார். 

செல்வராகவனின் என்ஜிகே, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கும் காப்பான் போன்ற திரைப்படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக நடிகர் சூர்யா ‘சூரரை போற்று’ திரைப்படத்தில் நடிக்கிறார். 

soorarai potru

இறுதிச் சுற்று திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, சுதா கொங்கரா இப்படத்தை எழுதி இயக்குகிறார்.  சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை  அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.  2டி எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் உருவாகும்  இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

suriya

இந்நிலையில் ஆஸ்கர் வெற்றியாளரும், இப்படத்தின் இணை தயாரிப்பாளருமான  குனித் மோங்கா சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில்,   தமிழில் எங்கள் பயணத்தை தொடர்வதில் மகிழ்ச்சி. ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் சூர்யாவை  தவிர வேறு ஒருவரால் கண்டிப்பாக நடித்திருக்க முடியாது. அவர் நமது நாட்டின் மிக சிறந்த நடிகர். அவர் தேசிய சின்னமாவார்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

 

soorarai potru

 

‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் வங்காளப் புரட்சி மற்றும் பட்ஜெட் விமான பயணத்தை உருவாக்கியது குறித்த கதையம்சம் கொண்டதாக   இருக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்க:  வேலூர் மக்களவை தேர்தல் ரத்து; தேர்தல் ஆணையம் அறிவிப்பு!