சூர்யாவின் கருத்தை வரவேற்கிறேன்: பா.ரஞ்சித் ட்வீட் 

 

சூர்யாவின் கருத்தை வரவேற்கிறேன்: பா.ரஞ்சித் ட்வீட் 

நடிகர் சூர்யாவின் கருத்திற்கு ஆதரவாக பா.ரஞ்சித் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். 

சென்னை: நடிகர் சூர்யாவின் கருத்திற்கு ஆதரவாக பா.ரஞ்சித் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். 

நடிகர் சூர்யா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, மூன்று வயதிலிருந்தே இந்தி திணிக்கப்படுகிறது. புதிய கல்வி கொள்கை விஷயத்தில் நம் எண்ணத்தை ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உரக்கச் சொல்ல வேண்டும் என்று பேசியிருந்தார். சூர்யாவின் அந்த பேச்சு தான்  தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. 

அவரது கருத்துக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், ஹெச்.ராஜா மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்பட ஒரு சிலர் விமர்சனம் செய்தனர். அதே போல் சீமான், நாஞ்சில் சம்பத், கமல்ஹாசன்  உள்பட ஒரு சிலர் ஆதரவு கருத்துக்களையும் தெரிவித்தனர். இந்த பிரச்சனையை மேலும் பெரிதாக்க விரும்பாத சூர்யா , தன் மீதான விமர்சனத்திற்குக் கூட பதில் அளிக்கவில்லை.

pa.ranjith

இந்த நிலையில் இது குறித்து பா.ரஞ்சித் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘புதிய கல்வி கொள்கை பற்றி சூர்யா அவர்களின் கருத்தை வரவேற்கிறேன். இன்றைய கல்விச் சூழலில் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார். சிறுபான்மையினர்,பெண்கள் ,மாணவர்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்தும், பேசியும், செயல்பட்டு வரும்  சூர்யாவிற்கு நாம் துணை நிற்போம்!’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.