சூரியகிரகணத்தை ரசிக்க வந்த மோடிக்கு ஏமாற்றம்!
இன்று சூரிய கிரகணத்தைக் காண வந்த மோடி மேக மூட்டத்தால் ஏமாற்றம் அடைந்ததாக ட்வீட் செய்துள்ளார்.
இன்று சூரிய கிரகணத்தைக் காண வந்த மோடி மேக மூட்டத்தால் ஏமாற்றம் அடைந்ததாக ட்வீட் செய்துள்ளார்.
இந்தியாவின் பல பகுதிகளில் இன்று சூரிய கிரகணம் பார்க்கப்பட்டது. தமிழகத்தில் கரூரில் முழு சூரியகிரகணம் தெரியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், மக்கள் ஆர்வத்துடன் சூரிய கிரகணத்தை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் சூரிய கிரகணத்தைக் காண பிரதமர் மோடி பாதுகாப்பு கண்ணாடிகளுடன் தயாராக வந்தார். ஆனால், டெல்லியில் பனி மற்றும் மேகமூட்டம் இருந்ததால் சூரிய கிரகணத்தை காண முடியவில்லை.
இது குறித்து மோடி வெளியிட்டுள்ள ட்வீட்டில், “துரதிர்ஷ்டவசமாக, மேக மூட்டம் காரணமாக சூரிய கிரகணத்தின் ஒளிவட்டத்தை என்னால் காண முடியவில்லை. ஆனால், கோழிக்கோட்டில் இருந்து நேரடி ஒளிபரப்பான காட்சிகளைப் பார்த்தேன். அதே நேரத்தில் வல்லுநர்களுடன் உரையாடி என்னுடைய அறிவுத்திறனை வளப்படுத்திக்கொண்டேன்” என்று கூறியுள்ளார்.
Like many Indians, I was enthusiastic about #solareclipse2019.
Unfortunately, I could not see the Sun due to cloud cover but I did catch glimpses of the eclipse in Kozhikode and other parts on live stream. Also enriched my knowledge on the subject by interacting with experts. pic.twitter.com/EI1dcIWRIz
— Narendra Modi (@narendramodi) December 26, 2019