சூப்பர் ஸ்டார்…லேடி சூப்பர் ஸ்டார்…எதிர்பார்ப்பை எகிறவைத்த லைக்கா!

 

சூப்பர் ஸ்டார்…லேடி சூப்பர் ஸ்டார்…எதிர்பார்ப்பை எகிறவைத்த லைக்கா!

நடிகர் ரஜினிகாந்த் -ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் புதிய திரைப்படத்தின் ஷுட்டிங் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் -ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் புதிய திரைப்படத்தின் ஷுட்டிங் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான பேட்ட திரைப்படம் மாபெரும் வெற்றியானது. அதையடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். அரசியல் மற்றும் சமூக கருத்துக்களைச் சார்ந்த படமாக உருவாகும் இப்படம் ரஜினியின் 166-வது படமாகும். 

petta

இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரல் 10-ம் தேதி முதல் மும்பையில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க,முன்னணி நடிகைகள் சிலரிடம் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், மீண்டும் சந்திரமுகி படத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாக்கியுள்ளார்.

 

rajinikanth

சந்திரமுகி திரைப்படம் வெளியாகும் சமயத்தில் நயன்தாரா வளர்ந்து வரும் நடிகையாக இருந்தார். ஆனால் தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக அவரது அந்தஸ்து உயர்ந்துள்ளது. இந்த சூழலில் ரஜினிகாந்த்துடன் இவர் இணைந்து நடிப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

rajinkanth

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். பேட்ட படத்தையடுத்து இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளது தற்போது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடைபெற்று முடிந்த பிறகே படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறியிருந்த  நிலையில், தற்போது தேர்தல் நடைபெறுவதற்கு எட்டு நாட்களுக்கு முன்பே தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க:தனுஷுக்கு வில்லனாகும் பிரபல தெலுங்கு பட நடிகர்!