சூப்பர் ஸ்டாரின் வாழ்த்துக்காக காத்திருக்கும் சிவகார்த்திகேயன் : சுவாரஸ்ய தகவல்!

 

சூப்பர் ஸ்டாரின் வாழ்த்துக்காக  காத்திருக்கும் சிவகார்த்திகேயன் : சுவாரஸ்ய தகவல்!

கனா படத்தை நடிகர் ரஜினிகாந்திற்கு  திரையிட்டுக் காட்ட நடிகர் சிவகார்த்திகேயன் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: கனா படத்தை நடிகர் ரஜினிகாந்திற்கு  திரையிட்டுக் காட்ட நடிகர் சிவகார்த்திகேயன் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பான கனா திரைப்படம் டிசம்பர் 21ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில்  மொத்தப் பணத்தையும் அந்தப் படத்தில் முதலீடு செய்துள்ளார். இதற்கான பணியில் தீவிரம் காட்டி வருவதால் சிவகார்த்தியை வைத்து 24ஏஎம்  ஸ்டூடியோஸ் ராஜா திட்டமிட்டிருந்த படங்கள் அப்படியே நிற்கின்றன.

இந்நிலையில் கனா திரைப்படம் திட்டமிட்டு வைத்திருந்த நவம்பர் இறுதியை ரஜினியின் 2.0 எடுத்துக்கொண்டதால் மாரி 2, அடங்கமறு போன்ற படங்களுடன் வெளியாகவுள்ளது. ரஜினி படம் தாமதமானதால், கண்டிப்பாக ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி தான் 2.0  வெளியாகும் என தமிழ் சினிமா முடிவு செய்து வைத்திருந்தது. ஆனால், நவம்பர் இறுதியான 29 இல் 2.0  வருவதால் கனா திரைப்படத்தின் இமேஜை உயர்த்த முடிவெடுத்திருக்கிறார் சிவகார்த்தி. 

சிவகார்த்தியின் ஒவ்வொரு படம் ரிலீஸாகும்போதும் மறக்காமல் வாழ்த்திவிடுவார் ரஜினி. அந்த  வகையில் ‘கனா’ படத்தை ரஜினிக்குத் திரையிட்டுக் காட்டி, அவரிடமிருந்து வாழ்த்து பெற்று படத்தின் புரமோஷனைத் தொடங்கலாம் என்பது கனா படக்குழு  திட்டம் வகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. நவம்பர் இறுதியில் ரஜினி திரைப்படம் ரிலீஸானாலும், இரண்டு மூன்று வாரங்களுக்குத்  திரையரங்குகளை ஆக்கிரமிக்கும். அதனால் அப்போது ரஜினியின் வாழ்த்தோடு  கனா ரிலீஸானால் கூடுதல் சிறப்பாக இருக்கும் எனப் படக்குழு முடிவெடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.