சூப்பர் ஸ்டாரின் ரஜினியின் ‘தர்பார்’ படப்பிடிப்பு நிறுத்தம்…!

 

சூப்பர் ஸ்டாரின் ரஜினியின் ‘தர்பார்’ படப்பிடிப்பு நிறுத்தம்…!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் தர்பார் படப்பிடிப்பு நாளை ஒரு நாள் நிறுத்தப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகவுள்ளது. 

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் தர்பார் படப்பிடிப்பு நாளை ஒரு நாள் நிறுத்தப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகவுள்ளது. 

பேட்ட படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார்.சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தளபதி படத்துக்குப் பிறகு சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

darbar

அதையடுத்து இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் கடந்த 10ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், நாளை ஒரு நாள் மட்டும் படப்பிடிப்பு நிறுத்தி வைக்க, படக்குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

darbar

இதன் காரணமாக சூப்பர் ஸ்டார், ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நயன்தாரா ஆகியோர் இன்று மும்பையிலிருந்து புறப்பட்டு வந்து நாளை, சென்னையில் நடக்கவுள்ள தேர்தலில் தங்களது வாக்கை பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர். பின்னர் நாளை இரவே புறப்பட்டு செல்லவுள்ளதாகக் கூறப்படுகிறது.  என்ன தான் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும், தங்களின் ஜனநாயக கடமையைத் தவறாமல் செய்கின்றனர். 
 

இதையும் படிங்க: நோட்டாவுக்கு ஒட்டு போடாதீங்க…வெங்கட் பிரபு வேண்டுகோள்…