சூப்பர் டீலக்ஸ் பட சர்ச்சை: விஜய்சேதுபதியை உடனே கைது செய்ய வேண்டும்! 

 

சூப்பர் டீலக்ஸ் பட சர்ச்சை: விஜய்சேதுபதியை உடனே கைது செய்ய வேண்டும்! 

சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் திருநங்கைகளைக் கொச்சைப்படுத்தியதற்காக விஜய் சேதுபதியைக் கைது செய்ய வேண்டும் என்று திருநங்கைகள் போர்க்குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

சென்னை: சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் திருநங்கைகளைக் கொச்சைப்படுத்தியதற்காக விஜய் சேதுபதியைக் கைது செய்ய வேண்டும் என்று திருநங்கைகள் போர்க்குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

ஆரண்ய காண்டம் திரைப்படம் வெளியாகிப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இரண்டாவது படம் சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தைப் பார்த்த பலரும் பாசிட்டிவான விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதில் நடித்துள்ள அனைவரும் தங்களது கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகப் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

super delux

இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு எதிராக திருநங்கைகள் போர்க்குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். சமூக செயற்பாட்டாளர் திருநங்கை ரேவதி கூறுகையில், விஜய் சேதுபதியாகிய உங்கள் மீது மக்கள் நிறைய மரியாதை வைத்திருக்கிறார்கள். உண்மையிலேயே திருநங்கைகள் குழந்தைகளைக் கடத்துபவர்களா?  மும்பையில் எப்போது திருநங்கைகள் குழந்தைகளை கடத்தினார்கள்? அதை நீங்கள் எப்போது பார்த்தீர்கள்? நீங்கள் வெள்ளை மொழி வாழ்க்கைக் கதையை படிக்க வேண்டும். நீங்களே இப்படி செய்தது தான் மனசு வலிக்கிறது’ என்று கூறியுள்ளார்.

கோவையைச் சேர்ந்த சில்கி பிரேமா கூறுகையில், ‘இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.விஜய் சேதுபதியை கைது செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார். 

இதையும் படிங்க: சாட்டை 2 படப்பிடிப்பில் சேட்டை செய்த அதுல்யா! வைரலாகும் வீடியோ!