சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ராக் ஸ்டார் அனிருத்! பின்னணி என்ன? 

 

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ராக் ஸ்டார் அனிருத்! பின்னணி என்ன? 

சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவருக்கு, அனிருத் தனது இசையில் பாட வாய்ப்பு தருவதாக கூறியுள்ளார். 

சென்னை: சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவருக்கு, அனிருத் தனது இசையில் பாட வாய்ப்பு தருவதாக கூறியுள்ளார். 

விஜய் தொலைக்காட்சியில் சுமார் 10 வருடங்களை தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். பெரியவர்கள், சிறுவர்கள் என இரண்டு பிரிவாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 16 வயது மேல் இருப்பவர்கள் சீனியரிலும்,16 வயது கீழ் உள்ளபவர்கள் ஜூனியரிலும் பங்குக்கேற்று வருகின்றனர். 

அந்த வகையில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், ரித்திக் டைட்டிலை வென்று, 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டைப் பரிசாகப் பெற்றார்.

அதைத்தொடர்ந்து சூப்பர் சிங்கர் 7 (16வது) மேற்பட்டோரு பங்குபெறும் போட்டி வருகிற சனிக்கிழமை (ஏப்ரல் 27) தொடங்க உள்ளது. பிரபல பின்னணிப் பாடகர்களான உன்னி கிருஷ்ணன்,அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், ஸ்வேதா மோகன் ஆகிய 4 பேரும் நடுவர்களாக இருந்து நிகழ்ச்சியை வழிநடத்த உள்ளனர்.

super singer

இந்த நிலையில் ஒருவொரு முறையும் இந்த நிகழ்ச்சியில் பெரிய இசையமைப்பாளர் ஒருவரை வழக்கமாக அழைத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த சீசனில் சிறப்பு நடுவராகத் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் கலந்துகொள்ள இருக்கிறார். 

அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகும் அந்த அதிர்ஷ்டசாலிக்கு அனிருத் இசையில் பாடும் வாய்ப்பும் வழங்குவதாகவும் கூறியுள்ளார்.