சூப்பர் சிங்கரில் தகுதியானவர்களுக்கு டைட்டில் கிடைப்பதில்லை: பிரபல நடிகை சாடல்!

 

சூப்பர் சிங்கரில் தகுதியானவர்களுக்கு டைட்டில்  கிடைப்பதில்லை: பிரபல நடிகை சாடல்!

மூக்குத்தி முருகன் சூப்பர் சிங்கர் சீசன் 7 ன் பட்டத்தைத் தட்டி சென்றார்.  அவருக்கு 50 லட்ச ரூபாய் மதிப்பிலான வீடும் வழங்கப்பட்டது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கடந்த 6 சீசன்களை தாண்டி 7ஆவது சீசன் வெற்றிகரமாக நடந்து வந்தது.  இதன் இறுதி போட்டிக்கு புண்யா, விக்ரம், கௌதம், ஷாம் விஷால், முருகன் ஆகியோர் தேர்வாகி  இருந்தனர். இப்போட்டியின் கிராண்ட் பினாலே கோவை கொடிசியா மைதானத்தில் கடந்த ஞாயிற்று கிழமை   நேரலை செய்யப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவருக்கு  அனிருத்  இசையில் பாடும்  வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் யார் அந்த அதிர்ஷ்டசாலி என்று மக்கள் ஆர்வமாகக் காத்திருந்தனர்.  

ttn

மூக்குத்தி முருகன் சூப்பர் சிங்கர் சீசன் 7 ன் பட்டத்தைத் தட்டி சென்றார்.  அவருக்கு 50 லட்ச ரூபாய் மதிப்பிலான வீடும் வழங்கப்பட்டது.இரண்டாவது இடத்தை  விக்ரம்  வென்ற நிலையில் அவருக்கு 25 லட்ச ருபாய் மதிப்பிலான வைர நகைகள் கொடுக்கப்பட்டது.மூன்றாவது இடத்தை புண்யா மற்றும் ஷாம் விஷால் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.  

இந்நிலையில் இதுகுறித்து நடிகை ஸ்ரீபிரியா தனது டிவிட்டர் பக்கத்தில், ‘டெக்னிக்கல் ரீதியாக சிறந்த போட்டியாளருக்கு சூப்பர் சிங்கர் டைட்டில் எப்போதும் கொடுக்கப்படுவதில்லை என்பதை  நான் நம்புகிறேன். இறுதிப்போட்டியிலிருந்த ஐவரில் விக்ரம் மற்றும் புண்யா இருவருமே  மியூசிக் அடிப்படையில் தகுதியானவர்கள்.

sripriya

சத்யபிரகாஷ் டைட்டில் வினர் ஆனதிலிருந்தே போங்கு தொடங்கிவிட்டது. எப்போதாவது நியாயமான முறையில் சங்கீதத்தை மட்டும் கௌரவிப்பார்கள் என்ற நம்பிக்கையில் பார்க்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.  நடிகை ஸ்ரீபிரியாவின் இந்த கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்து  தெரிவித்து வருகின்றனர்.