சூதாட்டத்தில் ஈடுபட்டவரை பொதுமக்கள் மத்தியில் சரமாரியாக தாக்கிய காவலர்!

 

சூதாட்டத்தில் ஈடுபட்டவரை பொதுமக்கள் மத்தியில் சரமாரியாக தாக்கிய காவலர்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட நபரை கெலமங்கலம்  காவல் உதவி ஆய்வாளர் செல்வராகவன் சரமாரியாக தங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட நபரை கெலமங்கலம்  காவல் உதவி ஆய்வாளர் செல்வராகவன் சரமாரியாக தங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கொரோன பாதிப்பால் நாடுமுழுவதும் வரும் 14ம் தேதி வரை ஊராடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.  இந்நிலையில், கெலமங்கலம்  அருகே உள்ள பேள்ளுர் கிராமத்தில் மாதேஷ் தன் நண்பர்களுடன் பணத்துக்கு சீட்டுக்கட்டு ஆடியதாக தெரிகிறது. தகவல் அறிந்து விரைந்து வந்த கெலமங்கலம்  காவல் உதவி ஆய்வாளர் செல்வராகவனை கண்டதும் அங்கிருவர்கள் தப்பி ஓடியுள்ளார். மாதேஷ் மட்டும் போலீஸிடம் சிக்கியுள்ளார்.

police attack

இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் செல்வராகவன் அருகில்கிடந்த பிளாஸ்டிக் பைப்பால் மாதேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது அருகில் இருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.