‘சூட்கேஸ் கைப்பிடியில் தங்கக் கம்பி’ : கையும் களவுமாகச் சிக்கிக் கொண்ட இளைஞர் !

 

‘சூட்கேஸ் கைப்பிடியில் தங்கக் கம்பி’ : கையும் களவுமாகச் சிக்கிக் கொண்ட இளைஞர் !

இன்று மீண்டும் மதுரை விமான நிலையத்தில் 1.10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

திருச்சி விமான நிலையத்தில் கடந்த மாதம் கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வந்தன. தலையின் ‘விக்’ , ஆசனவாயில், உடமைகள் உள்ளிட்ட இடங்களில் மறைத்து வைக்கப்பட்டு வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர்களிடம் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் அனைவரும் வெளிநாட்டிற்குத் தங்கத்தைக் கடத்தி செல்வது தெரிய வந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் மதுரை விமான நிலையத்தில் 1.10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

Airport

சிங்கப்பூரில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக மதுரை விமான நிலையத்தில்  உள்ள சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதனால், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் அதிகாரிகள் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டுள்ளனர். அதில், சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு வந்த ஒரு பயணியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்துள்ளது.

Gold

அந்த நபரை அழைத்துச் சென்று தனியாகச் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் அவர் சூட்கேஸின் கைப்பிடியில் மறைத்து வைத்திருந்த 1100 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர், அந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. அதன் பின் அவரை, பெருங்குடி காவல் நிலையத்தில் சுங்க அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.