சுஷ்மா சுவராஜ் முடிவுக்கு கணவர் வரவேற்பு

 

சுஷ்மா சுவராஜ் முடிவுக்கு கணவர் வரவேற்பு

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்ற மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவிப்புக்கு அவரது கணவர் வரவேற்பு தெரிவித்துள்ளார்

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்ற மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவிப்புக்கு அவரது கணவர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மத்திய பிரதேச மாநிலம் விதிசா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ். இவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ளார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அவ்வப்போது சிகிச்சையும் பெற்று வரும் சுஷ்மா, சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்துகொள்வதும் இல்லை. 

இதனிடையே, வருகிற 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று அறிவித்தார்.  உடல்நலம் காரணமாக தான் போட்டியிட போவதில்லை எனவும், தனது விருப்பத்தை கட்சி மேலிடத்துக்கு தெரிவித்து விட்டதாகவும் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்திருந்தார்.

swaraj

இந்நிலையில், : நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்ற மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவிப்புக்கு அவரது கணவர் சுவராஜ் கவுசல் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “மேடம்-தேர்தல்களில் போட்டியிட போவதில்லை என்ற உங்களது முடிவுக்கு நன்றி. ஓட்டப்பந்தய வீரர் மில்க்கா சிங் கூட ஒரு கட்டத்தில் ஓட்டத்தை நிறுத்திவிட்டார்” என பதிவிட்டுள்ளார்.