சுவர் இடிந்து 3 பேர் உயிரிழப்பு.. காற்று வாங்க மரத்தடியில் உட்கார்ந்திருந்ததால் நேர்ந்த சோகம்!

 

சுவர் இடிந்து 3 பேர் உயிரிழப்பு.. காற்று வாங்க மரத்தடியில் உட்கார்ந்திருந்ததால் நேர்ந்த சோகம்!

ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்ல முடியாததால், அவரது மகள்கள் மகள்கள் கலா(40), சுமித்திரா(32) உடன்  வசித்து வந்துள்ளார்.

தாம்பரம் அடுத்த பீர்க்கங்கரணை பகுதியை சேர்ந்தவர் ராஜாங்கம் (60). ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்ல முடியாததால், அவரது மகள்கள் மகள்கள் கலா(40), சுமித்திரா(32) உடன்  வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு காற்று வாங்குவதற்காக வீட்டு வாசலில் கட்டில் போட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவருடன் அவரது மகள்களும் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அச்சமயம் அந்த இடத்தில் இருந்து பழைய சுவர், பலத்த காற்றில் சேதமடைந்து அங்கு அமர்ந்திருந்தவர்கள் மீது விழுந்துள்ளது. 

ttn

சத்தம் கேட்டு அப்பகுதிக்கு சென்ற பொதுமக்கள், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராஜாங்கம் பரிதாபமாக செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். அவர்களின் மகள்கள், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் தந்தை, மகள்கள் ஆகிய 3 பேரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.