சுற்றுலா சென்ற மாணவர்கள்… லாரி மீது கார் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு: இருவர் படுகாயம்!

 

சுற்றுலா சென்ற மாணவர்கள்… லாரி மீது கார் மோதியதில்  6 பேர் உயிரிழப்பு: இருவர் படுகாயம்!

ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் இரண்டு மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். 

சேலத்திலிருந்து சிமெண்ட் ஏற்றிக்கொண்டு  திருப்பூர் மாவட்டம் அவினாசியை நோக்கி லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது.  அப்போது பழங்கரை தேசிய நெடுஞ்சாலையில் சேலத்திலிருந்து ஊட்டிக்கு சுற்றுலா சென்ற டவேரா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து லாரியில் மோதியது. இதில் காரில் பயணித்த கல்லூரி மாணவர்கள் 5 மற்றும் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் இரண்டு மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். 

tn

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம்  அடைந்தவர்களைச் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார்  முதற்கட்ட விசாரணையில், சுற்றுலாவுக்கு சென்ற மாணவர்கள் சேலம் விநாயகா பாராமெடிக்கல் கல்லூரியில் படித்து வந்தது தெரியவந்துள்ளது.