‘சுறா’ படம் எடுக்கும் போதே அது ஓடாது என்று எங்களுக்கு தெரியும்: தயாரிப்பாளர் குமுறல்!?

 

‘சுறா’ படம் எடுக்கும் போதே அது ஓடாது என்று எங்களுக்கு தெரியும்: தயாரிப்பாளர் குமுறல்!?

நடிகர் விஜய்யின் 50 வது  படமான சுறா மிகவும் மோசமான திரைப்படம் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் விமர்சனம் செய்துள்ளார்

நடிகர் விஜய்யின் 50 வது  படமான சுறா மிகவும் மோசமான திரைப்படம் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் விமர்சனம் செய்துள்ளார். 

நடிகரும் தயாரிப்பாளருமாக வலம்  வருபவர் சங்கிலி முருகன். இவர் எங்க ஊரு பாட்டுகாரன், காதலுக்கு மரியாதை, சுறா உள்ளிட்ட படங்களை தயாரித்தவர். அது மட்டுமின்றி பல்வேறு படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். 

sangili murugan

இந்நிலையில் நடிகர் சங்கிலி முருகன் தனது தயாரிப்பு அனுபவம் குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், ‘காதலுக்கு மரியாதை கதையைக் கேரளாவிற்குச் சென்று பாசிலிடம்  கேட்டேன். கதை பிடித்திருந்ததால் தயாரிக்கச் சம்மதம் சொன்னேன். அந்த படத்திற்காக முன்கூட்டியே விஜய்க்கு அட்வான்ஸ் தொகை கொடுத்து விட்டேன். அந்த படத்தை பாசில் மலையாளத்தில் எடுப்பதாக்கச் சொன்னார். அதனால் அந்த படம் தமிழில் ரீமேக் ஆனது. படப்பிடிப்பில் ஷாலினி நிறைய டேக்குகள் வாங்குவார். இருந்தாலும் அவர் தான் அந்த கதாபாத்திரத்திற்குச் சரியாக வருவார் என்று எண்ணினோம். படப்பிடிப்பு முழுவதும் கேரளாவில் நடந்தது. அப்போது திரைத்துறையில் போராட்டம் நடந்து கொண்டிருந்ததால் மிகுந்த சிரமப்பட்டு அப்படத்தை எடுத்தோம்’ என்றார்.

vijay

இதை தொடர்ந்து சுறா படம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ‘ விஜய்யின் மிக மோசமான படம் என்றால் அது சுறா. படத்தின் இயக்குநரை  மாற்றலாமா என்று நானும் விஜய்யும் ஆலோசிக்கும் அளவுக்கு அந்த படம் இருந்தது. அதை பற்றியெல்லாம் பேசி என்ன ஆக போகிறது? என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.