சுர்ஜித் தவிக்கவிட்டு போய்விட்டானே… மு.க.ஸ்டாலின் வேதனை..!

 

சுர்ஜித் தவிக்கவிட்டு போய்விட்டானே… மு.க.ஸ்டாலின் வேதனை..!

நான்கு நாட்களாக நாட்டையே ஏக்கத்தில் தவிக்கவிட்ட சுஜித் நமக்கு நிரந்தரச் சோகத்தைக் கொடுத்து போய்விட்டான்.

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து மீட்க முடியாத சுஜித் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

surjith

88 மணி நேரமாக ஆழ்துளை கிணற்றுக்குள் வீழ்ந்து மீட்க முடியாத சிறுவன் நள்ளிரவில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டான். அவனது இறப்பு நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஆறுதல் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின்,’’நான்கு நாட்களாக நாட்டையே ஏக்கத்தில் தவிக்கவிட்ட சுஜித் நமக்கு நிரந்தரச் சோகத்தைக் கொடுத்து போய்விட்டான்.

சுஜித் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது?அவனது இழப்பு தனிப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பல்ல. நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு. சுஜித் நம் நினைவில் என்றும் நீங்க மாட்டான்’’ என அவர் தெரிவித்துள்ளார்.