சுர்ஜித் தவறி விழுந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் – தாய் கலாமேரி 

 

சுர்ஜித் தவறி விழுந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் – தாய் கலாமேரி 

குழந்தைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என சுர்ஜித்தின் பெற்றோர்கள் உருக்கமாக பேட்டியளித்துள்ளனர்.

குழந்தைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என சுர்ஜித்தின் பெற்றோர்கள் உருக்கமாக பேட்டியளித்துள்ளனர்.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு சுர்ஜித்தின் பெற்றோர்கள் அளித்த பேட்டியில்,  “ஒட்டுமொத்த தமிழக அரசும் நல்ல முயற்சி எடுத்து எனது மகனை மீட்க அனைத்துவித நடவடிக்கையும் மேற்கொண்டது. மீட்பு பணிக்கு உதவிய முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் நன்றி. தங்களால் இயன்ற அளவிற்கு சுர்ஜீத்தை  மீட்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.

surjith

ஆழ்துளை கிணறுகளில் உயிரிழப்பு சம்பவம் தொடர கூடாது. சுர்ஜித்தின் இறப்பே இறுதியாக இருக்க வேண்டும். சுர்ஜித் தவறி விழுந்து இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பதே எனது ஆசை. சுர்ஜித்துக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. சுர்ஜித் குழிக்குள் விழுந்தவுடன் அம்மா அம்மா… என அழைத்தான்… பயப்படாத சாமி அம்மா தூக்கிவிடுகிறேன் என கூறினான் ஆனால் மீட்க முடியவில்லை” எனக் கூறினர்.