சுர்ஜித்துக்கு இறுதி சடங்குகள்: உடல் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு!

 

சுர்ஜித்துக்கு இறுதி சடங்குகள்: உடல் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு!

மீட்பு பனியின் போது  இருந்த அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் மருத்துவமனை வளாகத்திற்கு வருகை தந்தனர். 

ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த குழந்தை சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்காகக் கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25 ஆம் தேதி மாலை  5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் உயிரிழந்தான்.  80 மணி நேரத்திற்கும் அதிகமான இந்த மீட்பு போராட்டத்தின் போது  ஆழ்துளை கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது. இதையடுத்து மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பிறகு சுர்ஜித் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. 

surjith

இதனையடுத்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த சுர்ஜித்தின் உடலை வயிற்றுப் பகுதி சிதைந்த நிலையில் அவர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.  இதை தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட உடல்  பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.  அப்போது மீட்பு பனியின் போது  இருந்த அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் மருத்துவமனை வளாகத்திற்கு வருகை தந்தனர். 

surjith

பிரேத பரிசோதனைக்குப் பிறகு  சுர்ஜித்தின் உடல் கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்திற்கு நல்லடக்கம் செய்ய கொண்டுவரப்பட்டது. தற்போது அங்கு கிராம மக்களும், அதிகாரிகள், அமைச்சர்கள் என பலரும் தங்கள் கண்ணீரால் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதி சடங்குகள் முடிந்து சுர்ஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.