சுர்ஜித்தின் குடும்பத்தினர் துடிப்பதைப் போல நாமும் துடிக்கிறோம் : முக ஸ்டாலின் ட்வீட்..!

 

சுர்ஜித்தின் குடும்பத்தினர் துடிப்பதைப் போல நாமும் துடிக்கிறோம் : முக ஸ்டாலின் ட்வீட்..!

மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியில், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டெடுக்கும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியில், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டெடுக்கும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. நேற்று மாலை 5:30 மணிக்கு விழுந்த சிறுவனை, 17 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் மீட்டெடுக்க முடியாமல் தமிழகத்தை சேர்ந்த மீட்புக் குழுவினர் திணறி வருகின்றனர். இந்நிலையில், சிறுவனை மீட்க 33 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு நவீன கருவிகளுடன் நடுகட்டுப்பட்டி வந்து, மீட்டெடுக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளது. 

Rescue team

இச்சம்பவம் குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும். அவரது குடும்பம் துடிப்பதைப் போல் நாமும் துடிக்கிறோம். அரசு இயந்திரம் முழுமையாகச் செயல்பட்டு அந்த உயிரை மீட்டாக வேண்டும். தொடர்ச்சியாக இதுபோன்ற சோக நிகழ்வுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி  வேண்டும்!” என்று தெரிவித்துள்ளார்.