சுபஸ்ரீ விழுந்து இறந்த இடத்தில் மலர் அஞ்சலி!

 

சுபஸ்ரீ விழுந்து இறந்த இடத்தில் மலர் அஞ்சலி!

கடந்த 12ஆம் தேதி பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார்.

கடந்த 12ஆம் தேதி பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார்.

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததால் விபத்தில் சிக்கி சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களிடம் உதவி ஆய்வாளர் பேசும் ஆடியோ நேற்று வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியது .அதில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியரிடம் பேனர் வைக்க அனுமதி கொடுத்தது யார் என பள்ளிக்கரணை உதவி ஆய்வாளர் பாஸ்கரன் கேட்கிறார். அதற்கு அந்த ஊழியர் உரிய பதில் தராததால் ஆத்திமடைந்த பாஸ்கரன் அனைத்து ஆதாரங்களையும் காவல் ஆணையருக்கு அனுப்பிவிடுவேன் எனக்கூறுகிறார்.

subhasri
 
இந்நிலையில் சுபஸ்ரீ இறந்து 8 நாட்கள் அதாவது ஒரு வாரம் நிறைவடைந்த நிலையில், அவர் விழுந்து உயிர் பிரிந்த இடத்தில் இன்று மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.